×

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் புகைப்படக் கண்காட்சி: 23ம் தேதிவரை பார்க்கலாம்

 

திருவள்ளூர்: தமிழ்நாடு நாள் புகைப்படக் கண்காட்சி நடக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ‘தமிழ்நாடு நாள் விழா’ இன்று முதல் 23 ம் தேதி வரை கொண்டாட உள்ளது. இன்று நடைபெற்ற விழாவில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழ்நாடு உருவான விதம் மற்றும் தமிழ்நாட்டின் கலாசாரம், பாரம்பரியம், பண்பாடு மற்றும் பெருமைகள் குறித்த சிறப்பு புகைப்படக் கண்காட்சியும், கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது.

கலை நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியாசைத்து துவக்கி வைத்தார். இந்த விழாவில் முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் கூ.பாபு, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஜெகதீஸ் சந்திரபோஸ், மாவட்ட கல்வி அலுவலர் தேன்மொழி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் புகைப்படக் கண்காட்சி: 23ம் தேதிவரை பார்க்கலாம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Day Photo Exhibition ,Thiruvallur District ,Thiruvallur ,Tamil Nadu Day ,Tamil Nadu Day Celebration ,Collector's Office Complex ,Tiruvallur District ,
× RELATED கத்திரி வெயிலில் சுருண்டு விழுந்து பெண் பலி